மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியிலும், அரசு மேல் நிலைப்பள்ளியிலும் 379 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 247 மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்களை ஒன்றியக்குழு தலைவர் ஐ.சுதந்திராகாந்தி இருளாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் ஏ.காதர்முகைதீன், கல்விக்குழுத்தலைவர் ஏ.ஷாஜஹான், மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.சௌக்கத்அலி, தொடக்கப்பள்ளி தாளாளர்…