மது பாட்டில்கள் விற்றவர் கைது
முதுகுளத்தூர் அருகே பெட்டிக் கடையில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
கிடாத்திருக்கையைச் சேர்ந்த ஆண்டி மகன் முத்திருளாண்டி (75). இவர் ஊரில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்று வந்தாராம். இது குறித்து பேரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சார்பு ஆய்வாளர் செல்லமணி மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 37 போலி மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.