பூக்குளம் அரசு பள்ளியில் கரிமூட்டம் மாணவர்கள் பரிதவிப்பு

Vinkmag ad

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே பூக்குளம் அரசு துவக்கபள்ளி வளாகத்திற்குள், கரி மூட்டம் போட, விறகுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கபட்டுள்ளது.பூக்குளம் அரசு துவக்கபள்ளியில் 250 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் கரிமூட்டம்
போடுவதற்காக, விறகுகள் குவிக்கபட்டுள்ளது.

பள்ளி எதிரே 10க்கும் மேற்பட்ட, அதிகமான கரிமூட்டங்கள் எப்போதும் எரிவதால், புகை மண்டலத்தில் சிக்கி, மாணவர்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும்,குவிக்கபட்டுள்ள விறகுகளால், மாணவர்களின் விளையாட்டு பாதிக்கபட்டுள்ளது.
இளஞ்செம்பூர் ஊராட்சி முன்னாள் காயாம்பு கூறியதாவது: பள்ளி எதிரே எரிக்கப்படும் கரிமூட்டத்திலிருந்து வரும் புகையால், மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. இளஞ்செம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கபட்டுள்ளது, என்றார். கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”பள்ளி வளாகத்திற்குள் குவிக்கபட்டுள்ள விறகுகளை அப்புறபடுத்த உத்தரவிட்டுள்ளது,” என்றார்.

News

Read Previous

முஅத்தின்கள்

Read Next

டாக்டர் ஃபாரூக்கியின் நூல்கள்

Leave a Reply

Your email address will not be published.