பிஸ்கெட் என நினைத்து எலி மருந்து தின்ற குழந்தை சாவு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே எலி மருந்தை பிஸ்கெட் என நினைத்து தின்ற குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் அர்ஜூன் (2). வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது அருகில் கிடந்த எலி மருந்தை பிஸ்கெட் என நினைத்து தின்றதால் மயக்கமடைந்தான். இதையடுத்து பெற்றோர் சாயல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அர்ஜூன் உயிரிழந்தான். இது குறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் அர்ஜூன் உறவினர் குருசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News

Read Previous

கண்ணுக்குத்தெரியும் ……………. – தங்கர்பச்சான்

Read Next

ரமளான் வந்து விட்டது

Leave a Reply

Your email address will not be published.