நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதல்: இருவர் காயம்

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவலைச் சேர்ந்த மணிகண்டன் டூவீலரில் முதுகுளத்தூரில் இருந்து தனது வேலையை முடித்து விட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் நிலை தடுமாறி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகில் நடந்து சென்ற வென்னீர் வாய்க்காலைச் சேர்ந்த ராஜேந்திரன் (54), முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பையா ஆகியோர் மீது மோதியது.

இதில் ராஜேந்திரன் கையில் காயம் ஏற்பட்டது. அவர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்கு ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுப்பையா முதுகுளத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ, ஜான்ஸிராணி மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

News

Read Previous

பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் சகோதரி கம்பத்தில் வஃபாத்து

Read Next

நலம் தானா?- கோடை சரும நோய்களை தடுப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *