தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி
முதுகுளத்தூர் உருகே உள்ள திருவரங்கம் மேல்நிலைப்பள்ளியில்
வியாழக்கிழமை மாணவர்கள் பாதுகாப்பு கருதி பட்டாசு வெடிப்பு மற்றும் தீ விபத்து தடுப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு பயிற்சி முகாமுக்கு பள்ளித் தாளாளர் வின்சென்ட் டி.ராஜன் தலைமை தாங்கினார். பள்ளித்தலைமை ஆசிரியர் பீட்டர் ராயப்பன் வரவேற்றார்.
ராமநாதபுரம் கோட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கருணாகரன், உதவி கோட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ஹக்கிம் பாட்ஷா, பரமக்குடி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் தெய்வேந்திரன் ஆகியோர் தீயின் வகை பற்றியும், தீயை எப்படி அணைக்க வேண்டும் என்பது பற்றியும் பட்டாசு வெடிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் பற்றியும், தீவிபத்து ஏற்படும் போது தீயணைப்பாளர்கள் எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி பயிற்சி அளித்தனர். முகாம் முடிவில் பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் ஜெயசீலன் நன்றி கூறினார்.