கடலாடி கருங்குளத்தில் “அம்மா’ திட்ட முகாம்
கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 45 மனுக்கள் பெறப்பட்டன. முகாமுக்கு சமூக நலத்துறை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.