குழந்தைத் திருமண விழிப்புணர்வு முகாம்
முதுகுளத்தூர் அருகே உள்ள அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் திருமணத்தை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சமூக நலத்துறையின் சார்பில் பள்ளியின் தலைமை ஆசிரியை ச.லலிதா தலைமையில் முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜி.மீனாட்சி மற்றும் ஊர் நல அலுவலர் வி.சண்முகசுந்தரி ஆகியோர் விளக்கஉரை நிகழ்த்தினர் ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவிகளுக்கு குழந்தைகள் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், பெண்களுக்கு திருமண வயது அடைந்த பின்பு திருமணம் செய்வது குறித்தும், பெண்களுக்கு திருமண உதவித்தொகை, விதவை பெண்களுக்கான நலவாழ்வு திட்டங்கள், தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.