தமுமுக ஆலோசனைக் கூட்டம்
முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமுமுக அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் மைதீன் உலவி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் பாகிர்அலி, வாவா ராவுத்தர், செய்யது சல்மான் ரபீக், அலி புட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி வரை கோரிக்கை அடங்கிய மனுக்களை இந்திய குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கவும், டிசம்பர் 6-ந்தேதி நிர்வாகிகள் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ம.ம.க செயலாளர் ஹாஜியார் இக்பால், தமுமுக நகர் தலைவர் ஜபருல்லா, செயலாளர் ஜியாவுதீன், அஷ்ரப், பொருளாளர் அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் ஒன்றியச் செயலாளர் அமீருல்ஹக் நன்றி கூறினார்.