தனியார் பேருந்தில் பயணித்தவரின் கை முறிந்தது: ஓட்டுநர் கைது
முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடிக்கு சனிக்கிழமை மதியம் தனியார் பேருந்து சென்றது. இதில், முதுகுளத்தூர் உழவன் தோப்பு காலனியை சேர்ந்த செங்கன் மகன் முனியசாமி (28) என்பவர் பயணித்துள்ளார். இவர், பேருந்துக்கு வெளியே கையை நீட்டி வைத்திருந்தாராம்.
அப்போது, கீழத்தூவல் அரசு மருத்துவமனை அருகே எதிரே வாகனம் வந்ததால், பேருந்தை ஓட்டுநர் சாலையை விட்டு கீழே இறக்கியுள்ளார். இதில், சாலையோர மரத்தில் மோதி முனியசாமியின் கை முறிந்தது. உடனே, முனியசாமியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், கீழத்தூவல் போலீஸார் வழக்குப் பதிந்து, தனியார் பேருந்தின் ஓட்டுநர் மேலாய்குடியைச் சேர்ந்த கார்த்திகைசாமியை கைது செய்தனர்.