தகராறில் 5 பேர் மீது வழக்கு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு மின்வயர் இழுப்பதில் தகராறு ஏற்பட்டதில் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவரது வீட்டுக்கு அரசு அனுமதியுடன் மின்சார இணைப்பு பெற்று அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்வயர் கொண்டு இழுக்கும் பணி நடைபெற்றது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த ஞானமனி மற்றும் அவரது உறவினர்களான வேதநாயகம், சிபியோன், பிரேனாஸ், விமலா ஆகியோர் மின் வயர் இழுக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் செல்வத்துடன் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஞானமனி, வேதநாயகம், சிபியோன், பிரேனாஸ், விமலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் விசாரித்து வருகிறார்.

News

Read Previous

முல்லாவின் கதைகள் – தலையில் விழுந்த பழம்…

Read Next

ஜெயலலிதா ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *