ஜெயலலிதா ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது

Vinkmag ad

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவன் அதிமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவை தேர்தலில்  போட்டியிடும் ஏ.அன்வர்ராஜாவுக்கு ஆதரவாக புதன்கிழமை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்செய்த பெருமை முதல்வர் ஜெயலலிதாவையேச் சாரும்.   பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்தவர் முதல்வர் ஜெயலலிதாதான். இந்தியா ஊழலற்ற நாடாக மாற வேண்டுமானால் ஜெயலலிதா ஆசிபெற்ற வேட்பாளர் ஏ. அன்வர்ராஜாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் கதிரவன்.  பிரசாரத்தின்போது முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம். முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

News

Read Previous

தகராறில் 5 பேர் மீது வழக்கு

Read Next

தேர்தல் வருகிறது… நம் தேசத்தைக் காப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *