ஜூலை 20இல் வட்டார விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
முதுகுளத்தூரில் ஜூலை 20ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கிடையே வட்டார விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
டி.மாரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் தேதயூஸ் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.பாலசுந்தரம், ஐ.இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முகுகுளத்தூர், கடலாடி மற்றும் சாயல்குடி பகுதிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் 31 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 20ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 6 ஆம் தேதி நிறைவு பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.