கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும், கௌரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் புதியதாக இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி புரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 2014-ஆம் கல்வி ஆண்டில் 5 மாதங்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரிவுரையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.