குழாய் அமைக்கும் பணியால் நடுரோட்டில் மெகா பள்ளம் விபத்து அபாயம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் ரோட்டில், ரகுநாதகாவிரி ஆற்றுபாலத்தின் அருகே, குழாய் அமைக்கும் பணியால், நடுரோட்டில் “மெகா சைஸ்’ பள்ளம் உருவாகி, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் ரகுநாத காவிரி ஆறு பாலத்திற்கு முன், பயணியர் விடுதி, காந்திநகர் பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய அமைக்கபட்ட குழாய் இணைப்புக்காக, ரோட்டின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் தோண்டப்பட்ட பள்ளம், சரிவர சீரமைக்கப்படவில்லை.
நடுரோட்டில் “மெகா சைஸ்’ பள்ளம் உருவாகியுள்ளது. இதனால், முதுகுளத்தூர்- பரமக்குடி, அபிராமம் செல்லும் வாகனங்கள் சிரமப்படுவதுடன், விபத்து அபாயமும் உள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உடனடியாக பள்ளம் சீரமைக்கப்படும், என்றார்.