கிராம பகுதிகளில் இனிமேல் தண்ணீர் பிரச்னை இருக்காது அமைச்சர் சுந்தரராஜ் பேச்சு

Vinkmag ad

பரமக்குடி, : முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருக்காது என்று அமைச்சர் சுந்தரராஜ் பேசினார்.
பரமக்குடியில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக அரசின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க மக்கள் முகாம் நடந்தது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது.பாலசிங்கம் தலைமை வகித்தார். எம்பி அன்வர்ராஜா, எம்எல்ஏ முருகன் முன் னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் கீர்த்திகா வரவேற்றார். அதிமுக அர சின் சாதனை விளக்க கையே டுகளை வீடு வீடாக சென்று அமைச்சர்கள் உதயகுமார், சுந்தரராஜ் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் சுந்தரராஜ் பேசுகையில், ஒரு கோடியே 82 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மழைகாலத்தில் வைகை ஆற்றில் வெள்ளம் வரும் போது தண்ணீர் வீணா வதை தடுக்க பரளை யாறு கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடந்துள் ளது. இதன் மூலம் பார்த்திபனு£ர், முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருக்காது.  விவசாயமும் அதிகரிக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள் ளது. பரமக்குடி அருகே காவனூரில் ரூ.920 கோடி யில் சூரிய மின்உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் சாத னைகளை கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதில் மாவட்ட ஊராட் சிகுழு தலைவர் சுந்தரபாண்டியன், மாவ ட்ட செயலாளர் தர்மர், தொகுதி கழக செயலாளர் பாலுச்சாமி, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முனியசாமி, போகலூர் சேர்மன் நாகநாதன்  உட் பட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

உங்கள் சிந்தனைக்கு சில துளிகள் …

Read Next

முதுகுளத்தூர் அருகே கபடி போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *