காதலிக்க 6 மாதங்களாக வற்புறுத்தல்: விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை; சிக்கியது உருக்கமான கடிதம்

Vinkmag ad

கீழத்தூவல்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவியை காதலிக்க வற்புறுத்தியதால், உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முதுகுளத்தூர் சாம்பக்குளத்தை சேர்ந்த தென்னரசு மகள் சூர்யா, 17. கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். கீழத்தூவல் அருகேயுள்ள சூரங்குளத்தை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன் காதலிக்குமாறு, மாணவியை வற்புறுத்தி வந்தார். பாஸ்கரன் அண்ணன் சிவக்குமார், அதே ஊரை சேர்ந்த கோபால், நேரிடையாகவும், பள்ளி நண்பர்கள் மூலமாகவும், பாஸ்கரனை காதலிக்கமாறு, சூர்யாவை வற்புறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக அடிக்கடி மொபைல்போனிலும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர். விரக்தி அடைந்த மாணவி,  விஷம் குடித்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். மாணவியின் தந்தை புகார்படி, “கடந்த ஆறு மாதங்களாக, மூவர் தொந்தரவு செய்ததால், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கொடுத்தார். பாஸ்கரன், சிவக்குமார், கோபால் ஆகிய மூவர் மீது, கீழத்தூவல் எஸ்.ஐ., ஆனந்தராஜ், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கடித விபரம்: எனது தற்கொலை முடிவுக்கு காரணம் சிவக்குமாரும், அவரது தம்பி பாஸ்கரனும் தான். பெற்றோர் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத நான், வாழ தகுதி இல்லாதவளாகிட்டேன். அப்பா, அம்மா பேச்சை கேட்காததால், நான் தவறான பாதையில் பயணிச்சுட்டேன். நான் இறந்த பின், சிவக்குமாரும், அவரது தம்பி பாஸ்கரனும் வந்தா, அடிச்சே கொன்னுடுங்க. இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News

Read Previous

டிச.18ல் மக்கள்தொடர்பு முகாம்

Read Next

சிறுமழைக்கே சகதியான ரோடு போக்குவரத்து பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published.