காக்கூரில் சமூக கணக்கெடுப்பு பயிற்சி

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே காக்கூர் ஊராட்சியில் புதன்கிழமை

கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சமூக கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது.

முகாமுக்கு ஊராட்சித் தலைவர் பி.போஸ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன், வட்டார மேற்பார்வையாளர்கள் வீரசேகர், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஓடு மற்றும் கூரை வீடுகள், கட்டடங்கள், வறுமையில் உள்ளவர்களின் பட்டியல் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டன.

ஊராட்சி மக்களிடம் கிராம வரைபடம் வரைதல் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். முகாமில் தன்னார்வத் தொண்டர்கள் புஷ்பவள்ளி, ரஜினி, கோபாலகிருஷ்ணன், இளையராஜா, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் சி.ராஜா நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!

Read Next

நான் என்ன சொல்வேனடி ………………

Leave a Reply

Your email address will not be published.