கடலாடி அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு

Vinkmag ad

கடலாடி அருகே உள்ள புரசங்குளத்தில் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக கடலாடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புரசங்குளத்தில் உள்ள மாசாணசுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவில் மர்ம நபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20ஆயிரத்தை திருடி சென்று விட்டாராம். இது குறித்து கோயில்பூசாரி புரசங்குளத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் கருப்பையா (47) கடலாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து வழக்குப் பதிந்து மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News

Read Previous

முதுகுளத்தூர் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

Read Next

இயற்கை மருத்துவம் : தேன்

Leave a Reply

Your email address will not be published.