முதுகுளத்தூர் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்
முதுகுளத்தூர் தாலுகா மேலக்கொடுமலூர், தேரிருவேலி, காக்கூரில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை துவங்கி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் தாலுகாவில் 10ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மேலக்கொடுமலூர் பிர்க்காவில் உள்ள மேலக்கொடுமலூர், கடைக்கனேந்தல், தட்டனேந்தல், கூத்தாடியேந்தல், மேலக்குளம், மேற்கு கொட்டகுடி ஆகிய ஊராட்சிகளில் வருவாய் தீர்வாய கணக்குகள் ஆய்வுப்பணியான ஜமாபந்தி நடைபெற உள்ளது. அதேபோல் 11ஆம் தேதி (புதன்கிழமை) தேரிருவேலி பிர்க்காவில் உள்ள பூசேரி, தாலியனேந்தல், வளநாடு, உலையூர், இளங்காக்கூர், ஆதங்கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
12ஆம் தேதி (வியாழக்கிழமை) காக்கூர் பிர்க்காவில் காக்கூர், புளியங்குடி பொசுக்குடி, கருமல், குமாரக்குறிச்சி, பிரபக்களூர் ஆகிய ஊராட்சிகளில் வருவாய் ஜமாபந்தி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சொ. விஸ்வநாதன் தலைமையில் நடை பெற உள்ளது. எனவே பொதுமக்கள் மனுக்களை நேரில் வழங்கலாம் என முதுகுளத்தூர் வட்டாட்சியர் ஆர். ரவீந்திரநாதன் தெரிவித்துள்ளார்.