ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை
முதுகுளத்தூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது.
இந்த மண்டல பூஜைக்கு, ராமநாதபுரம் தேவஸ்தான நிர்வாக அலுவலர் திவான் மகேந்திரன் தலைமை வகித்து, அன்னதான நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, சற்குருநாதர் எஸ். பாலகுருசாமி, குருநாதர்கள் அ. திருமால், பி. முருகானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி, அதிகாலையில் கணபதி ஹோமமும், காலையில் 1008 திருவிளக்குப் பூஜையும், மதியம் உச்சிகால பூஜையும், பஜனைகளும், 18 வகையான அபிஷேகங்களும், மாலையில் நடைபெற்ற மண்டல பூஜையில் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழா ஏற்பாட்டினை, முதுகுளத்தூர் பாலகுருசாமி, ஸ்ரீ ஐயப்ப பக்தர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கடலாடி: ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மண்டல பூஜைக்கு குருநாதர் கே. கருப்பையா தலைமை வகித்தார். விழாவுக்கு, சற்குருநாதர் ஆர். மகேந்திரன், அதிமுக மாவட்டச் செயலர் ஆர். தர்மர், கடலாடி ஊராட்சித் தலைவர் ஆர். முருகன், ஆப்பனூர் என். முருகானந்தம், மீனங்குடி மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மதியம் அன்னதானமும், மாலையில் 1008 குத்துவிளக்குப் பூஜையும் நடைபெற்றது.
சிக்கல்: தர்ம சாஸ்தா கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது. இதில், குருநாதர் நாகரெத்தினம் தலைமை வகித்தார்.
ஜயப்ப சேவா சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலர் செல்லத்துரை, பொருளாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், 18 வகையான அபிஷேகமும், காலை 1008 திருவிளக்குப் பூஜையும், அன்னதானமும் நடைபெற்றன. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் ஊர்வலம் நடைபெற்றது.