என்.எஸ்.எஸ் முகாம் நிறைவு விழா
முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தில் சோணைமீனாள் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஜன.26 ஆம் தேதி தொடங்கி ஏழு நாள்கள் நடைபெற்றது. முகாமுக்கு சோணைமீனாள் அறக்கட்டளை தலைவர் சோ.அசோக்குமார் தலைமை வகித்தார்.
செல்வநாயகபுரம் ஊராட்சித் தலைவர் கே.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன், ஸ்ரீ கண்ணா மெட்ரிக்பள்ளித் தாளாளர் காந்திராஜன், ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினார். என்.எஸ்.எஸ் முகாம் திட்ட அலுவலர் பேராசிரியர் வி.வேலவன் வரவேற்றார், முகாமில் அன்பு தொண்டு நிறுவனம் சார்பில் 50 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் சிறப்பாக களப்பணி ஆற்றிய மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது,முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.அதிசயம் நன்றி கூறினார்.