பிப்ரவரி 7, இராசல் கைமா தமிழ் மன்றத்தில் பொங்கல் விழா
ராசல் கைமா : துபையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இராசல் கைமா கடற்கரை நகரில் செயல்பட்டு வரும் இராசல் கைமா தமிழ் மன்றத்தில் பொங்கல் விழா 07.02.2014 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்தியப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் பூபதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக துபை இந்தியன் கன்சல் ஜெனரல் அலுவலகத்தின் துணை கன்சல் ஜெனரல் மதுரை அசோக் பாபு, துபை பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமை செயல் இயக்குநர் ராமமூர்த்தி
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சின்னத்திரை கலைஞர்கள் ம.க.ப. ஆனந்த், சாலினி, பழனி, அமுதவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களை மகிழ்விக்கும் வண்ணம் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர். மேலும் குழந்தைகள் நடனம், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன.
மேலதிக விபரங்களுக்கு ஹபீப் 050 647 28 68, மாசானராஜ் 055 961 6377 உள்ளிட்ட தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.