இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
முதுகுளத்தூரில் இளைஞர் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
முதுகுளத்தூர் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துராமலிங்கம் (25). இவர் முதுகுளத்தூர் மறவர் தெருவில் மனைவி பொன்னுகலாவுடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மனைவி வெளியூருக்கு சென்றிருந்த போது முத்துராமலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் பொன்னுகலா கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் மூக்கன் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.