அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்து, கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை, அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மாவட்ட பஞ்., குழு தலைவர் சுந்தர பாண்டியன் தலைமையில் இனிப்பு வழங்கப் பட்டது. ஒன்றிய இளைஞரணி செயலர் மாடசாமி, இணை செயலர் கதிரேசன், துணை செயலர் செந்தில் குமார், ஒன்றிய துணை செயலர் காட்டுராஜா, மாவட்ட மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் மலைக் கண்ணன், மகளிரணி இணை செயலர் ராம லட்சுமி, வார்டு செயலர் தமிழ் செல்வம், ஊராட்சி தலைவர்கள் கனகவள்ளி முத்துவேல், மயிலேறி வேலன், பொன்னரியாள், மலர்மாயக் கண்ணன் , கஜேந்திரன், சேதுராமன், தேவி முருகானந்தம், சண்முக வள்ளி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.