இலவச வேஷ்டி, சேலை வழங்கல்
முதுகுளத்தூர் தாலுகாவில் செவ்வாய்க்கிழமை இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதுகுளத்தூர் தாலுகா கீழக்குளம் ஊராட்சியில் தலைவர் கே.பஞ்சவர்ணம் சண்முகம் தலைமையிலும்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் லெட்சுமணன் முன்னிலையிலும், இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர்கள் முருகவேல்,சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காக்கூரில் தாசில்தார் எஸ்.மோகன் தலைமையில், ஊராட்சித் தலைவர் போஸ் முன்னிலையில் இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.
மேலக்கொடுமலூரில் ஒன்றியக் குழுத்தலைவர் சுதந்திராகாந்தி தலைமையில், ஊராட்சித் தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன.