மாநில குத்துச் சண்டை போட்டி: முதுகுளத்தூர் மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாநில அளவிலான நடந்த குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கிடையே 19 வயதிற்குள்பட்ட ஹெவி வெயிட் பிரிவு குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர் எம்.லிங்கநாதன்(வடக்கூர்) இரண்டாம் பரிசாக வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவரை கல்விக் குழுத்தலைவர் ஏ.எம்.எம்.முகம்மது மீரா, தாளாளர் அன்வர், தலைமை ஆசிரியர் முகம்மது சுலைமான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜான்சன்கலைச்செல்வம்,என்.கமால்பாட்ஷா,மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பாராட்டினர்.