கிடப்பில் முதுகுளத்தூர் புறவழிச்சாலை பணி
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில், புறவழிச்சாலை பணி கிடப்பில் உள்ளதால், அதிவேகமாக செல்லும் வாகனங்களால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
முதுகுளத்தூர் பஜார் ரோடு குறுகலாக இருப்பதால், வெளியூர் செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. விபத்துகளை தடுக்கும் வகையில், 6.25 கோடி ரூபாயில், புறவழிச்சாலை அமைக்க 2012ல், அரசு அறிவித்தது.
நிலம் கையகபடுத்தும் பணி தாமதத்தால், புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் உள்ளது.
இதனால் குறுகலான முதுகுளத்தூர் பஜார்களில், அதிவேகமாக செல்லும் நான்கு சக்கர வாகனங்களால், சில நாட்களுக்கு முன் இரண்டு விபத்துகள் நடந்தன. டூவீலரில் சென்ற காக்கூர் செல்வராஜ், சைக்கிளில் சென்ற ஓட்டல் தொழிலாளி பார்த்திபன் காயமடைந்து ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டுள்ளனர். புறவழிச்சாலை விரைவில் அமைத்தால் விபத்துகளை தவிர்க்க முடியும்.