இலவச கண் சிகிச்சை முகாம்
முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூரில் திங்கள்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கமும் சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து முதுகுளத்தூர் அன்பு தொண்டு நிறுவனம் சார்பில் இளஞ்செம்பூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.
முகாமுக்கு தொண்டு நிறுவனர் கோ. உமையலிங்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மயிலேரி வேலன் துவக்கி வைத்தார். மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன், கிராமத் தலைவர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மருத்துவ உதவியாளர் அன்னலெட்சுமி, கிருஷ்ணவேணி, சுமித்ரா, அன்பு தொண்டு நிறுவனச் செயலர் சதீஸ், பொருளாளர் மகேந்திர பூபதி, நிர்வாகிகள் மணிகண்டன், குணசேகரபாண்டியன், ராஜேஸ்வரன், குமரன் சேதுபதி, மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.