அண்ணா தொழிற் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
முதுகுளத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பணிமனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி 4 நாள்களாக தொடர் நூதன போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வாயில் கருப்புத் துணிகளை கட்டி நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மத்திய சங்க துணைத் தலைவர் ஜி. முத்து தலைமை தாங்கினார்.
அண்ணா தொழிற்சங்க கிளைச் செயலர் என். ரவிச்சந்திரன், பொருளாளர் அ. அப்துல் லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கிளைச் செயலர் கே. தர்மராஜ் பாண்டியன், கிளைத் தலைவர் எஸ். ராஜேந்திரன், வி. புகழேந்தி உள்பட போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.