நெல்சன் மண்டேலா
காவற் கோட்டத்தில் கோட்டான்கள் சிறையிட்டாலும்…..
கால் நூற்றாண்டுகள் கருக் கொண்டே வளர்த்த விடுதலைத் தீ…….
நிலத்தினில் யாருக்கும் அடிமையில்லை என்று நித்தம்
புவியாளும் மடையருக்கு நீ சொன்ன செய்தி………
நிலையாமல் இன்று நீ சென்றாலும், நிலையான அறம்
என்றும் நிலைத்திடும் இந்த அவனியிலே.
பொய்யான அறம் கூறும் அரசியலார்க்கு – உன்
மெய்யான வாசகங்கள் தன் நெஞ்சை சுட்டெரிக்கும்,
பொய்யில்லை தன் நெஞ்சறிவார் உண்மை.
பொய்யில்லை தன் நெஞ்சறிவார் உண்மை.
அன்புடன்,
காசி விசுவநாதன்.
” வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு “
NelsonMandela.jpg
Tags: நெல்சன் மண்டேலா