இலவச கண் சிகிச்சை முகாம்
முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட அதிகாரி டாக்டர் ஆர்.முகம்மது நசிம் மேற்பார்வையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமில் கீழத்தூவல் அரசு தலைமை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துக்ஷ அதிகாரி டாக்டர் கோவிந்தன் மற்றும் வட்டார கண் மருத்துவ உதவியாளர்கள் தெய்வா (கீழத்தூவல்), சரஸ்வதி (பேரையூர்) ஆகியோர் பங்கேற்றனர். மருத்துவ முகாமில் 70 பேர் கண் பரிசோதனை செய்தனர். அதில் 15 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக பரமக்குடி தாலுகா அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.