இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலைதடுமாறி  விழுந்ததில் இளைஞர் இறந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் ராமதாஸ் (21). அதே ஊரைச்சேர்ந்த சங்கரன் மகன் கபிலன் (23). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூரில் இருந்து சொந்த வேலையை முடித்து விட்டு காக்கூருக்கு திரும்பினர். அப்போது எதிர்பாராத விதமாக  நிலைதடுமாறியதில் இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கபிலன் படுகாயம் அடைந்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News

Read Previous

விலையில்லா பொருள் வழங்கல்

Read Next

“இ’-புத்தகங்களை விரும்புவோர் அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *