முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் அருகே புஷ்பவனத்தில் தாசில்தார் மோகன் தலைமையிலும், பொன்னக்கனேரி ஊராட்சி தலைவர் சூசையம்மாள் முன்னிலையிலும் அம்மா திட்டம் முகாம் துவக்க விழா நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணசாமி, மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார் பங்கேற்றனர்.