அபிராமம் – முதுகுளத்தூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் தொடருது விபத்து அபாயம்
கமுதி, : அபிராமம் – முதுகுளத்தூர் இடையிலான சாலை கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
கமுதி அருகே உள்ள அபிராமத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு நாள்தோறும் பஸ், லாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த சாலை, கடந்த 5 ஆண்டுக்கு முன்பே சேதமடைய துவங்கியது. தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, அபிராமம் – முதுகுளத்தூர் இடையே புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அபிராமம் கிராம மக்கள் கூறுகையில், `அபிராமம் – முதுகுளத்தூர் சாலை கடந்த 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன.
டூவீலர் ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும்போது, சாலை பள்ளத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மழை காலத்தில் நிலைமை படுமோசமாகிவிடுகிறது.
அபிராமம் – முதுகுளத்தூர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இடம்: அபிராமம் இந்து பஜார்.
டூவீலர் ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும்போது, சாலை பள்ளத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மழை காலத்தில் நிலைமை படுமோசமாகிவிடுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டால் இச்சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் விபத்து, நோய் பாதிப்பு உள்ளிட்ட அவசர தேவைக்கு முதியோர், குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
எனவே இந்த வழித்தடத்தில் புதிய சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.