முதுகுளத்தூர் பகுதியில் திமுகவினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை திமுகவினர் கருப்புக்கொடி மற்றும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா. சபையில் பேச எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் திமுக நகர் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில் திமுக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்தும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒன்றியத் தலைவர் முனியசாமி, செயற்குழு உறுப்பினர் த.முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச்செயலாளர் கே. கருப்பையா, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஷாஜஹான், மாவட்ட பிரதிநிதி ஏகே.ராமு, ஒன்றிய அவைத்தலைவர் எஸ். பூபதிமணி, முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.செல்லமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலாடி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ராஜசேகர், சாம்பக்குளம் ஊராட்சி தலைவர் சண்முகம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் எம். ஆறுமுகம் உள்பட திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதேபோல் சாயல்குடி பேருந்து நிலையம் அருகிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இ. ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலாடி ஒன்றியப் பொருளாளர் எஸ்.பி. போஸ், நகர் கழக செயலாளர் பி.முனியசாமி, இளைஞரணி அமைப்பாளர்கள் ஜி. முனியசாமி, துரைராஜ், மற்றும் திமுக ஊராட்சி செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.