அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
முதுகுளத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைந்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் சிவ.ராமச்சந்திரன், இணைச் செயலர் சுந்தரமூர்த்தி, இளைஞரணி செயலர் தூரி எம்.மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியைக் கட்டிக்காக்க வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளராக ஆக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேதுபதி நன்றி கூறினார்.