சோ ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி

Vinkmag ad

சோ ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி 

அனைவர்  மேலும் அன்பு – தொடுப்பார் 
அனைவர் மேலும் அம்பு 
 
அனைவருடனும் நட்பு – வைப்பார் 
அனைவருக்கும் ஆப்பு 
 
தூக்கி வைப்பார் ஒருநாள் – மாறினால் 
தாக்கி எழுதுவார் மறுநாள் .
 
நையாண்டி  செய்வதில் யாரையும்  -விட்டு 
வையான்டி என்பார் ,அதை வையமே ரசிக்கும். 
 
எதிர்ப்புகள் எத்தனை வந்தபோதும் 
எதிர்த்துப் புகழ் பெற்ற இரும்பு மனிதர்
 
கட்டுக்கதைகளும் கவர்ச்சியும் இன்றி  
கட்டுக்கோப்பாய் பத்திரிக்கை நடத்தியவர்  
 
தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் 
தொகுதிக்கே செலவு செய்த நேர்மையாளர்   .
 
 ஆதாரமில்லாமல் எதையும் 
ஆதாயத்திற்காக எழுதாதவர் .
 
ஆன்மிகத்தை ஆழ்ந்து உணர்ந்தவர் 
அரசியலை  ஆய்ந்து அறிந்தவர் . 
 
 ஆட்சி மாற்றங்களில் பெரும்பங்கு வகித்தவர். 
சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்தவர் .
 
பன்முகம் கொண்ட பண்பாளர் 
இன்முகம் கொண்ட  இனியவர்
 
பகைச்சுவையின்றி  நாட்டுநடப்பை 
நகைச்சுவையாக  உரைப்பவர்.
 
பண்பட்ட மனத்தினர் – யாரையும் 
புண்படுத்தாத குணத்தினர் .
 
அரசியல் , பத்திரிகை, நாடகம், சினிமா 
அனைத்திலும் முத்திரை பதித்தவர் .
 
சகல கலா வல்லவரென்று 
சகலரும் போற்ற வாழ்ந்தவர். 
 
நேர்மை உறங்கும் நேரம்  
தானும் உறங்கிவிட்டாரோ !
 
இறைவன் இறந்துவிட்டானா – பார்க்க 
இறைவனடிக்கே சென்றுவிட்டார். 
 
சிலேடை சித்தர் சேது  சுப்ரமணியம்

News

Read Previous

குணசீலர்

Read Next

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *