வளர் இளம் பெண்களுக்கு

Vinkmag ad

வளர் இளம் பெண்களுக்கு
வரும் முன் காக்கும் சிறப்பு தடுப்பூசி”

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று புற்றுநோய் தாக்குதலை அதிகமாக பார்க்கிறோம்.இன்று உலக அளவில் பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்கள் இரண்டு. ஒன்று- மார்பக புற்றுநோய் , இரண்டு – கர்ப்ப வாய் புற்றுநோய்.கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள்…அதிகமாக வெள்ளைப்படுதல்,துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்,  அதிகமான ரத்தப்போக்கு, மாதவிடாய் தள்ளி போதல், சிறுநீர் கழிக்க தொந்தரவு, சிறுநீர் தானாகவே வெளியேறுதல்.,உடலுறவின் போது வலி மற்றும் இரத்தம் வெளியேறுதல்,மாதவிடாய் ஒரு வருடம் நின்ற பின் திரும்பவும் இரத்தம் வெளியேறுதல்உடல் சோர்வு ,இடுப்பு வலி,காரணமில்லாமல் எடை குறைதல்,கால் மற்றும் தொடைவலி,
இந்தியாவில் இந்த கர்ப்ப வாய் புற்றுநோயால் நாள் ஒன்றுக்கு 200 பெண்களும் ஒரு மணி நேரத்திற்கு 8 பெண்களும்  உயிரிழக்கின்றனர்.
ஆனால் இதை நாம் மிக எளிதில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தவும் மற்றும் தடுக்கவும் முடியும்.மற்ற புற்றுநோய்களை தவிர்க்க முடியாவிட்டாலும் கர்ப்பவாய் புற்றுநோய் வராமல் காக்க இன்றைய மருத்துவத்தில் வழி உண்டு என்ற விஷயம் பெண்களின் வயிற்றில் பாலை வார்க்கும். இந்த புற்றுநோய்க்கு முக்கிய காரணி எச்.பி.வி. எனும் வைரஸ் ஆகும்.இந்த வைரஸ் சத்தமில்லாம தன் வேலையை காட்டுவதோடு சரி வேறு எந்த அறிகுறிகளையும காட்டாது. 10 – 15 வருடம் சென்று தான் நோய் விஸ்வரூபம் எடுக்கும்.இந்த வைரஸ் பாதிப்பினை முன்கூட்டியே பாப் ஸ்மியர் (pap smear)என்ற கர்ப்ப வாய் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். பொதுவாக இந்த புற்றுநோய் கல்யாணம் ஆன பெண்களை அதிகம் தாக்கும்.இன்றைய நவீன மருத்துவத்தில் வைரஸ் பாதிப்பினை தடுக்க இளம் வயதிலேயே தடுப்பூசியை கொடுத்து விடுவதின் மூலமாக கல்யாணமான பின் வரும் கர்ப்பவாய் புற்றுநோயை 90 முதல் 95 சதம் வரை தடுக்க முடியும்.இந்த தடுப்பூசியை 9 வயதிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட பெண்  குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது அவசியம். இதன் பயனை முழுமையாக அடைய முதல் டோஸ் போட்டு 2 மாதத்தில் இரண்டாம் டோஸ் போட வேண்டும். பிறகு 6  மாதம் சென்று மூன்றாம் டோஸ் போட வேண்டும்.அப்படி தவற விட்டால் திருமணத்திற்கு 6 மாதத்திற்கு முன்பாக கொடுப்பது அவசியம்.
இத்தடுப்பூசி கர்ப்பவாய் புற்றுநோய் மட்டுமின்றி கருவாய் புற்றுநோய்( vulval cancer) யோனிக்குழாய் புற்றுநோய்(vaginal cancer) மற்றும் இன உறுப்பு மருக்களை(genital warts) தடுக்க வல்லது்.வருடம் ஒருமுறை உங்கள் மகளிர் மருத்துவரை அணுகி கர்ப்பவாய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.கர்ப்பவாய் புற்றுநோய்க்கு முன் வரும் மாற்றங்களை 10 வருடத்திற்கு முன்பாகவே கண்டு குணபடுத்த முடியும். சரியான விழிப்புணர்வு வந்தால் அடுத்த தலைமுறை பெண்களை நாம் கர்ப்பவாய் புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியும்.

News

Read Previous

வாழ்க்கை நலம்

Read Next

வேர்கடலை கொழுப்பு அல்ல …! ஒரு மூலிகை…!!

Leave a Reply

Your email address will not be published.