செயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதல் குழந்தை
பிரித்தானியாவில் பிறந்து 13 நாட்களே ஆன குழந்தை செயற்கை இதயம் பொருத்தப்பட்டு சுவாசித்து வருகின்றது.
டியார்னா மிட்டில்டன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்குழந்தை உலகின் செயற்கை முறையில் சுவாசிக்கும் இளைய குழந்தையாகும்.
5 பவுண்ட் எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு வைடன் கோரொனரி ஆர்ட்டரிஸ் மற்றும் வலது பக்க இதயம் இல்லாததால் செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது உயிருக்கு போராடி வரும் இந்த குழந்தைக்கு விரைவில் இதயம் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்.
குழந்தையின் பெற்றோர்களான சார்னெ க்ரே (22) காரி மிட்டில்டன் (25) ஆகியோர் மக்களை உறுப்பு தானம் செய்யுமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் இதுவரை எந்தவித இதயமும் கிடைக்காததால் 33 பவுண்ட் எடையுள்ள இயந்திரத்தின் உதவியுடன் இந்தக் குழந்தை சுவாசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=390663086706897545#sthash.thSqtLs3.dpuf