தோல் மருத்துவம்

Vinkmag ad

https://www.patrikai.com/skin-series-1-en-uyir-thola-written-by-skin-specialist-dr-paari/

என்னுயிர் “தோலா”: டாக்டர் பாரி 1

தோல் மருத்துவர் த.பாரி எம்.பி.பி.எஸ்.,எம்.டிடிடி. நான் யாருக்கும் பாடம் கற்பிக்க முடியாது. நான் உங்களை சிந்திக்க  வைக்க மட்டுமே முடியும்.

– சாக்ரடீஸ்.

உடல் உறுப்புகள் எல்லாவற்றையும் தழுவி நிற்கும் தோல் பாதுகாப்பு முறைகளையும் தோலில் வரும் வியாதிகளைப் பற்றியும்  விரிவாகக் காண்போம்.

தோல் மருத்துவம் என்றால் என்ன?

பிறந்தகுழந்தை முதல் முதியவர் வரை  உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள முடி,தோல் மற்றும்  நகம் பற்றி உள்ள சிறப்பு மருத்துவம் தோல் மருத்துவம் ஆகும்.முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தோல் மருத்துவரை அணுகலாம்.

தோல் மருத்துவம் மற்ற துறைகளிலிருந்து  எவ்வாறு  மாறுபட்டது?

தோல் மாறுபாட்டை மருத்துவரும், நோயாளியும் நேரடியாகக் காணலாம்.அதனால் என்ன?`வியாதியை நேரடியாகக் காணும் போது இரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்ற பரிசோதனைச் செய்ய அவசியம் குறைவு.சிலசமயம் வியாதியை நன்றாக ஆராய்வதற்கு பயாப்சி தேவைப்படலாம்.பயாப்சி என்றால் கேன்சர் பரிசோதனை என பயப்பட வேண்டாம்.

தோல் மருத்துவரிடம் செல்லும் முன்  நீங்கள் என்ன செய்ய கூடாது.

1] வாரப் பத்திரிகை ,இண்டர் நெட் போன்றவற்றை பார்த்து விட்டு நீங்களாக  சிகிச்சை எடுத்துக் கொள்ள கூடாது.சிலர் இண்டர் நெட்டில் படித்தேன்,பக்கத்து வீட்டு ஆண்டி’’சொன்னார்கள்  என்று பற்பசை களையும்,பூண்டையும் முகத்தில் தடவி புண் ஆக்கிக் கொண்டு வருகிறார்கள்.’ பின் வரும் கட்டுரைகளில் வியாதிகளைப் பற்றி விவரமாக எழுதினாலும். உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும்.

2] வாட்ஸ் அப்பில் வரும் தகவலைப் பார்த்து விட்டு அதே வியாதி தனக்கு வந்துவிட்டதோ என பதறவேண்டாம். நிறையபேர் நகத்தில் கறுப்புகோடு வாந்தால் அது கேன்சர் என அலறி அடித்துக் கொண்டு வாழ்வே மாயமாக வருகிறார்கள். அவருகளுக்கு ஆறுதல் சொல்லி புத்தி புகட்டவும் வேண்டியுள்ளது.

3] நீங்களாக மருந்துகடையில் வாங்கி மருந்து தடவக் கூடாது. முகம் வெள்ளையாக வேண்டும் என்று ஒருசிலர்  பக்கவிளைவுடன் காலம் தாழ்ந்து மருத்துவரை அணுகுகின்றனர்.

4] தோல் உமானதக்காக  சலுனையோ,அழகுநிலையத்தை அணுகுதல் உகந்தது அல்ல.

5] தோலில் போடும் மருந்தானாலும், வாயில் போடும் மருந்தானாலும் மருத்துவர் குறித்த காலம் மட்டுமே சிகிச்சை  செய்ய வேண்டும். நீங்களாக அந்த மருந்தை தொடரக்கூடாது.

தோல் மருத்துவர்கள் பெரும்பாலும் க்ளவுஸ் அணிவது இல்லை,பரிசோதிக்க முகம் சுழிப்பதும் இல்லை, அறிவுறை கூறுவதாக நினைத்து அருகில் உள்லோர் நோயாளிகளை பயமுறுத்த வேண்டாம்.

6] தோல் மருத்துவரை அணுகும் போது என்ன செய்ய வேண்டும்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.தோல் வியாதி உடலில் உள்ள வியாதியின் வெளிப்பாடாக இருக்கலாம். பரிசோதனைக் குறிப்பு மற்றும், மாத்திரைகளையும்  கொண்டுசெல்ல வேண்டும். அலோபதி இல்லாத பிறசிகிச்சை முறை செய்தால் அவற்றையும் கூற வேண்டும். தோல் மருத்துவர் கொடுக்கும் சீட்டைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

7] நிறைய ஆலோசனைப் பெற வேண்டுமானால் அதை வீட்டிலேயே குறிப்பு எடுத்து வரலாம்.

சிலர் சூம்பிப்போன டியூப்பை மட்டும் கொண்டு வருகின்றனர்.

முடியுமா?முடிஉதிராமல் தடுக்க முடியுமா? போன்ற முக்கியமான கேள்விகளுக்கு அடுத்து பார்ப்போம்.’ முடியுமா?முடி உதிராமல் தடுக்க முடியுமா?

இந்த கேள்விக்கு பதில் காணும் முன்  நாம் முடியைப் பற்றிய  அறிவியலாக காண்போம்’ முடி ஒரு உயிர்த் தொழிற்சாலை. முடி வாழ்நாள் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் தலையில் ஒரு 1லட்சம் முடி வேர்கள் உள்ளது. இவற்றில் 70%-90% முடிவேர் வளரும்.மீதி உள்ள 10%-30% முடிவேர் வளராமல் தோலில் அடியில்  இருக்கும்.

ஒரு முடி மாதம் 1செ.மீ வளரும்.ஒரு முடி 2 முதல் 6 வருடம் [26-60 செமீ] வரை வளரும்.பின்னர்  முடி கொட்டி விட்டு முடிவேர் மட்டும் 3 மாதம் தோலின் அடியில் ஓய்வு எடுக்கும். இதை முடி வளர்ச்சி.சுழற்சி எனலாம். ஒரு தலை முடி அதன் வாழ்நாளில் 10 முறை சுழற்சிக்கு உட்படும். ஒரு நாளைக்கு 150-100 முடி விழும்.

15 வயதில் ஒரு சதுரமீட்டருக்கு 500 முடி இருக்கும்.50வயதில் ஒருசதுர மீட்டருக்கு 200 முடி மட்டுமே இருக்கு.அதாவது வயது ஆக முடி அடர்த்தி குறைவது இயல்பே. சுருக்கமாக இரட்டை சடையில் ஆரம்பித்து’பாப கட்டிங்கிள் முடி முடியும்.

தோலின் வழியாக எண்ணெய்யோ, தண்ணீரோ,ஷாம்புவோ ஊடுருவ முடியாது. எனவே தண்ணீரால் ஷாம்புவால் முடி குளிக்கும் போது கீழே விழும்.அதே போல் எண்ணெய்யால் முடி வளராது’ஒரு மருந்த தோலின் அடியில் உள்ள முடி வேருக்கு  அணுப்புவது சிரமம்.

News

Read Previous

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்

Read Next

ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம்

Leave a Reply

Your email address will not be published.