கறிவேப்பிலை

Vinkmag ad

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர்

கருதுகின்றனர்.
இதனால் தான் சாப்பிடும்போது

​​

உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே

போட்டு விடுகிறார்கள்.
ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்.
ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய
ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா.
இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,
பி, சி,
கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக்,
குளுகோசைட்,
ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின்,
ஆஸ்பார்டிக் அமிலம்,
அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.
இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது.
பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை
புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில்
ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.
மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை
கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி
ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார்.
இது புற்றுநோய்,
இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்,
இருதயம்,
கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என
இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100
கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100
கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை
காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.
பரம்பரை நரை வராது.
கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்,
இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும்
என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும்,
கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா?
என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர்.
அதில் கறிவேப்பிலையும்,
கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது.
மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது.
பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ.
பாதிக்கிறது.
செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது.
விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன.
தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்,
கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10
கறிவேப்பிலை இலையையும்,
மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை
விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம்
என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3
மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்.
சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.
கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்,
அறிவை பெருக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும்.
சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170
கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 – 125
கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170
கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10
காய்கறிகளையும் குறிப்பிடுகிறது.
அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

News

Read Previous

சேட்டுக்கு ஆண் குழந்தை

Read Next

உலகின் மிகப்பெரிய தமிழ் கலைச்சொல் உருவாக்கும் இணையக் குழு

Leave a Reply

Your email address will not be published.