துபாயில் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் நடத்தும் சித்திரை திருவிழா 2014

Vinkmag ad
DTS1துபாய் : துபாயில் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா 25.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. 
சித்திரைத் திருவிழாவிற்கு டிடிஎஸ் ஈவெண்ட் தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகிக்கிறார்.
சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் துணைச் செயலாளராக உயர் பதவி வகித்து வரும் தமிழர் முனைவர் ராஜன் நடராஜனும், சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தங்க மீன்கள் படத்திற்காக தேசிய விருது பெற்ற செல்வி சாதனா இவ்விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
சின்னத்திரை சூப்பர் சிங்கர்ஸ் கிருஷ்ணமூர்த்தி, ரவிசங்கர், யாழினி, நவீன் ஆகியோர் பாடல்கள் பாடுகின்றனர். மெல்லிசை நிகழ்வினை சந்திரா கீதா கிருஷ்ணன், கீதா பர்டோலி குழுவினர் வழங்குகின்றனர்.
கவிதா பிரசன்னா குழுவினரின் நடன நிகழ்ச்சி, சின்னத்திரை மிமிக்ரி புகழ் சேது உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகளும் சித்திரைத் திருவிழாவில் இடம்பெறுகின்றன.
நிகழ்விற்கான அணுசரனையினை பும்கா குரூப், பிளாக் துளிப் பிளவர், ராயல் செஃப், சௌந்தர்யம் ஜெனரல் டிரேடிங், வேதாரண்யம் பாய்ண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளி, சூப்பர் டெக்ஸ், பேங்க் ஆஃப் பரோடா, வோஸ்டாக், அப்கிரேட் டயர் சேஞ்சிங், டிரான்ஸ்கான், ரமீ குரூப் ஆஃப் ஹோட்டல், வெஸ்டர்ன் ஆட்டோ, கிராஃபிக் எகுப்மெண்ட், பெர்செப்ட் பிரிண்ட், சன் குரூப், வாஃபி ஹோட்டல்ஸ், அல் வஹா, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

News

Read Previous

346 வாக்குச் சாவடிகளுக்கு உபகரண பொருள்கள் ஒப்படைப்பு

Read Next

துபையில் எம்.பி.எம். அன்சாரி ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.