டிச. 29இல் சுதர்சன நாச்சியப்பன் ராமநாதபுரம் வருகை

Vinkmag ad

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் டிச. 29ஆம் தேதி ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு சாதனையாளர்களுக்கு தமிழ்ச்சங்க விருதுகளை வழங்கிப் பேசுகிறார்.

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தைச் செட்டியாரின் 20ஆம் ஆண்டு நினைவு இலக்கிய விழா டிச. 29ஆம் தேதி ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் பா. ஜெகதீசன் தலைமையும், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி முன்னிலையும் வகிக்கின்றனர்.

விழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் அமரர் த. குழந்தைச் செட்டியார் விருதை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை  இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வழங்கிப் பேசுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

News

Read Previous

விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

Read Next

கவிஞர் காவிரிமைந்தன் – ஒரு அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published.