புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்
அல்லா ஒருவர்தான் இறைவர்
அவரது தூதர் அண்ணல் நபி .
அவரது சொல்லே ஒரு வேதம் .
அவர் காட்டியதே நன்மார்க்கம்.
அதன்படி நடப்பதுதான் சொர்க்கம்.
அறவழி வாழ்வது புனிதமாகும்.
அறம் செய்து வாழ்தல் மனிதமாகும்.
அதனை உணர்த்திடும் வகையினிலே
அனைவரும் கொண்டாடும் ரம்ஜானாம் .
அதிகாலை முதல் மாலை வரை
அன்னம் , தண்ணீர் கொள்ளாமல்
மாண்புடன் ரம்ஜான் மாதத்தில்
நோன்புதன்னை நோற்றிடுவார்
அல்லாவை நினைத்தே இருந்திடுவார்.
ஐந்து வேளை தொழுகை நடத்திடுவார்.
இஃப்தார் நோன்பு திறக்கையிலே
இஸ்லாமியர்கள் அனைவருமே
எல்லோருடனும் இணைந்திருந்து
அல்லா காட்டிய வழியினிலே
இல்லாதவர்க்கு ஈகை செய்து
அன்றைய நோன்பு முடித்திடுவார்.
குர்ஆன் கூறிய முறையினிலே
குணக்குன்றாக வாழ்ந்திட்டால் .
குறைகள் எல்லாம் மறைந்திடுமே .
குவலயம் முழுதும் வளம் பெறுமே .
அஸ் ஸலாமு அலைக்கும்.
புனித ரம்ஜான் வாழ்த்துக்கள் .
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்
21.04.2023