துபாய் நகரில் அன்னம் நிறுவனத்தின் மிருதுவான, ருசியான மற்றும் ரசாயாண கலப்பில்லாத ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம்

Vinkmag ad

துபாய் நகரில் அன்னம் நிறுவனத்தின் மிருதுவான, ருசியான மற்றும் ரசாயாண கலப்பில்லாத ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம்

துபாய் :

துபாய் நகரில் செயல்பட்டு வரும் அன்னம் பேஸ்ட்ரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்னம் இடியப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது புதிதாக ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெடிமேட் இட்லியை பொதுமக்கள் வாங்கி விரைவாக சாப்பிட்டு தங்களது பணிகளுக்கு செல்ல முடியும்.

இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பைசல் முஹம்மது கூறியதாவது :

தங்களது அன்னம் நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே இடியப்பம் உள்ளிட்ட பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட விற்பனையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிகரித்து வரும் இயந்திர யுகத்தில் நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை பெரும்பாலோர் சாப்பிடுகின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் தமிழகத்தின் பாரம்பரிய இட்லி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இட்லியானது மிருதுவானதாகவும், சுவையானதாகவும் உள்ளது. குறிப்பாக எந்தவிதமான ரசாயண கலப்பும் இதில் கிடையாது.

இதனை வாங்கி விரைவாக சாப்பிட்டு தங்களது பணிகளுக்கு பொதுமக்கள் திரும்ப முடியும். இந்த மெஷின் மூலம் ஒரு நாளை ஒரு இலட்சம் இடலி வரை தயாரிக்கும் வசதி உள்ளது.

எனவே திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விசேஷங்களுக்கும் இட்லியை வாங்கி பயன்படுத்த முடியும்.

இதனை வாங்கிச் செல்பவர்கள் வீட்டில் சாதாரண வெப்பநிலையில் இரண்டு நாட்கள் வரையிலும், பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரங்கள் வரையிலும் வைத்து சூடு செய்து சாப்பிடலாம்.

பொதுமக்கள் இந்த ரெடிமேட் இட்லியை வாங்கி சாப்பிட்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

இட்லி தேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :

+971 4 3235 663 / +971 55 778 2323

News

Read Previous

மோடி அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி?

Read Next

புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.