நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ்

Vinkmag ad

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ்

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக செயல்பட்ட தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் . எஸ். அஸ்மத்து பாத்திமா வாக்காளர் விழிப்புணர்வு, புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை சிறந்த முறையில் செய்ததிற்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பாக சென்னை, கலைஞர் அறிவியலத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில் சிறந்த திட்ட இயக்குனர் (Nodal Officer) சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இரண்டாமாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் மாணவர் பி.வி. கோவிந்தன்-க்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு அவர்கள் வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் பாராட்டினர்

News

Read Previous

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

Read Next

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்!

Leave a Reply

Your email address will not be published.