துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி 

Vinkmag ad

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி 

துபாய் : 

துபாய் முஷ்ரிப் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார். முஹம்மது இறைவசனங்களை ஓதினார். 

பொதுச்செயலாளர் முஹம்மது அஸ்லம் வரவேற்புரை நிகழ்த்தினார். 

கவின்முகில் உடன்குடி மு. முகமது யூசுப், அமீரக இந்தியர் நல்வாழ்வு பேரவையின் அமீரக துணைத் தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கல்வி மற்றும் சமூக மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினர். 

 அமீரகத்தின் பணி நிறைவு பெற்று செல்லும் சீனி, சபியுல்லா உள்ளிட்டோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

பொருளாளர் முஹம்மது அனஸ் நன்றி கூறினார். 

ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், ஜஹாங்கீர், அமீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஜமாஅத் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

News

Read Previous

துபாயில் மனித நேய கலாச்சாரப் பேரவை நடத்திய இரத்ததான முகாம்

Read Next

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *