தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022
தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022
வருகுது , வருகுது தீபாவளி .
வருடந்தோறும் வரும் தீபாவளி.
தவறு செய்பவன்
தான் பெற்ற
தனயனே ஆனாலும்
தயங்காது தண்டனை
தருவதே தருமமென்று
தரணிக்குணர்த்திடும்
நரகாசுர வத நாளே
தீபாவளி.
.
பட்டாடை உடுத்து
பட்டாசு வெடித்து
பட்சணங்கள் ருசித்து
பட்ட துன்பம் மறந்து
பலரோடு பகிரும்
பண்டிகை நாளே
தீபாவளி .
.
புற இருளகற்ற
தீபங்கள் ஏற்றி
அக இருளகற்ற
அறவழிவாழ்ந்து,
உற்றார் ,உறவினர்களுடன்
உற்சாகமாக கொண்டாடும்.
தீபாவளி .
பட்டாசுத்தொழிலாளர்
நெசவாளர், வர்த்தகர்கள்
பலகோடிப்பேருக்கு
வருமானம் தந்து
வறுமையைப்போக்கவே
ஐப்பசியில் வருகின்ற தீபாவளி – பலர்
அரும்பசி தீர்த்திடும் தீபாவளி.
அனாதைகளானவர்க்கும் .
ஆனந்தம் நல்கிடவே
ஆடைகளும் , உணவும்
அவர்களுக்குத் தந்து
அவர்களோடு கொண்டாடுவோம்
தீபாவளி .
மாசு குறைத்திடுவோம் .
விபத்தைத் தவிர்த்திடுவோம்.
முதியோர் , பிணியோர்க்கு
பாதிப்பு ஏதுமின்றி
பாதுகாப்பாய் கொண்டாடுவோம்
தீபாவளி.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்