தியாகம் என்பதே குர்பான்
தியாகம் என்பதே குர்பான்
இறைத்தூதர் இபுறாகீம்
தனக்கும் – மனைவி ஹாஜராவிற்கும்
அல்லாவின் அளவற்ற கருணையால்
பிறந்த இனிய குழந்தை இஸ்மாயிலை..
பாலகன் என்றும் பாராமல்
பதிமூன்று வயது மகனையே
இறைவன் கட்டளை ஏற்று
இறைப்பலி கொடுக்க எத்தனிக்க…
பக்தியை மெச்சிய இறைவன்
இறைதூதர் சிப்ரயீல் மூலம் தடுத்து
அதற்கு பரிகாரமாக
ஆடு பலி கொடுத்து
பலி வழி வந்த மாமிசத்தை
நான்கு பங்கு வைத்து
ஒரு பங்கை உமக்கு வைத்து
மூன்று பங்கை பிறருக்கு
ஈந்து மகிழ்ந்து வாழ்க என
ஆசிர்வதித்த நிகழ்வை போற்றும் அற்புத நாளான பக்ரீத் திருநாளில்
“தியாகம் என்பதே குர்பான்”
என்ற வாழ்க்கை நெறியேற்ற….
அனைத்து இஸ்லாமிய
அன்பு உறவுகளுக்கும்
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
பா.திருநாகலிங்க பாண்டியன்
மதுரை